ராக்கி என்கிற ராக்கம்மா

Story Info
விதவை பெண்ணுக்கு உதவும் நல்ல மனிதன்
4.2k words
5
4
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

இந்தக் காலம் நம்மை நொடிபொழுதில் புரட்டி போட்டுவிடும். நாம் கூழங்கல்லாய் இருந்தால் ஒன்றுமில்லை. எத்தனை முறை காலம் நம்மை புரட்டி போட்டாலும், உருண்டு உருண்டு மெருகேறிக் கொள்வோம். ஆனால் நாம் ஆமைகள். ஒரு முறை புரட்டிப் போட்டால் மல்லாக்காக விழுந்து வானத்தில் நம்மை சுற்றும் கழுகினைப் பார்த்து அது எப்போது தரை இறங்கி நம்மை உண்ணுமோ என்ற பயத்தில் காலத்தினைக் கழிக்க வேண்டிருக்கும். நம்மைப் போல நடுத்தர வர்க்கத்தின் இழிவுகளை சுமந்து செல்லும் ராக்கி எனும் ராக்காயின் கதை இது. இந்தக்கதையில் காமம் கொஞ்சம் இருக்கும். அதனோடு நம்மின் நிலையும் இருக்கும். உங்கள் சகோதரனின் புதிய கதைக்கு வரவேற்கிறேன்.

"என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே... உங்களுக்கே அநியாயமா தெரியலையா?.. " என்றபடி அவர்களைப் பார்த்தாள் ராக்கி. அந்த அதிகாரி திமிராக எதுவுமே நடக்காதது போல எதுவுமே காதில் விழாதது போல நகர்ந்தார்.

"ஐயா.. நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே... வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது.'' என ராக்கி கத்திப் பார்த்தாள்.

அது வேங்கைப்புதூரின் வருவாய்த் துறை அலுவலகம். அங்கிருக்கும் ஆட்கள் பிணத்தின் மீது இருக்கும் ஒரு ரூபாயையும் எடுத்துக் கொள்ளும் நல்ல மனிதர்கள். ராக்கியின் சாபத்தினைக் கேட்டு அலுவலகத்துக்குள் யாரோ சிரித்தார்கள். அந்த சிரிப்புக்குப் பின்பு "சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது" என ஒருவர் அவளை வெளியேற்றினார். அவள் முரண்டு பிடித்தாள். அவர் கொஞ்சம் வேகமாக அவளைத் தள்ள கேட்டின் பக்கமாக அவள் சரிந்து விழுந்தாள். அருகில் அத்தனை பேர் இருந்தும் ஒருவர் கூட அவளுக்கு உதவியாக ஓடி வரவில்லை. இரண்டு ஒரு பெண்கள் கூட நிலத்தினை பதிவு செய்வதற்காக வந்திருந்தார்கள் அவர்கள் கூட ஒரு பெண்ணிற்கு எதிராக நடக்கக்கூடிய குற்றத்திற்கு குரல் கொடுக்கவும் அந்த பெண்ணை தூக்கி ஆறுதல் சொல்லவோ முன் வரவில்லை.

முந்தானை விலக்கி அவளுடைய மார்புகளின் கொள்ளளவு அனைவர்க்கும் விருந்து வைத்தது. அவளைப் பார்த்து ரசித்தார்கள் தவிர ஒருவர் கூட அச்சோ பாவம் பெண்ணென்று இறங்கவில்லை. ராக்கி செய்வது அறியாது அங்கிருந்த மரத்தில் நிழலில் நின்று கொண்டிருந்தாள். தன்னுடைய உடலில் ஏற்பட்ட சிராய்ப்புகளை எச்சில் தொட்டு வைத்தாள். அவளுக்கென்று ஆதரவாக வீட்டில் கூட யாருமில்லை. உறவுகள் இன்றி அவள் தவிப்பதற்கு அவளுமே ஒரு காரணம். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று ஏற்பட்ட காதல் அவன் மேல் பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு முக்தி போனது.

கூலி வேலை செய்தாவது தன்னை காப்பாற்றி விடுவான் என நம்பி அவனுடன் ஓடி வந்தாள். கை, கால் விளங்காத அவனுடைய அம்மாவுக்கு பணிவிடைகள் செய்து தன்னை ஒரு தூய மருமகளாக காட்டிக் கொண்டாள். கொஞ்ச நாட்களிலேயே மாமியார் இறந்து போனாள். அடுத்த படுக்கையாக இருந்த சனியன் விட்டுப் போச்சே என்று அவளுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தாலும்.. ஒட்டு உறவு என்று யாரும் இல்லாத ஒரு அனாதை போல தான் மாற போகின்றோம் என்பதை அவள் உணரவே இல்லை.

ராக்கிக்கென தனி அழகுண்டு. இன்றைய வெள்ளைத் தோல் பல்லிகளைப் போல இருப்பவர்களை எல்லாம் அழகிகள் என மக்களிடையே பரப்பிவிட்டார்கள். ஆனால் அவள் மாநிறத்தில் கொஞ்சம் பூசினாற்போல இருப்பவள். அவளுடைய பற்கள் கூட வயல்வெளியின் கரையோரம் நடப்பட்ட சவுண்டல் போல நேராக இருந்தன. வட்ட முகத்தில் பொட்டின்றி வெளிறிப் போயிருந்தன. கணவனை இழந்த சோகமும், அரசு துறைகள் கொடுக்கும் அயற்சியும் அவளுடைய முகத்தில் குடி கொண்டிருந்தன. ஆனால் பச்சை நிற புடவையில் ஆங்காங்கு சிறிய பூக்கள் சிரித்துக் கொண்டிருந்தன.

வயல்வெளியில் உழைத்து உழைத்து இறுகியிருந்த அவளுடைய உடலினை அங்கிருந்த செல்வம் என்கிற செல்வநாயகம் கவனித்தார். அவருடைய பார்வையில் ராக்கியின் மார்பை அளந்தார். முப்பத்தி ஆறு இருக்கும். இறுக்கிய அவள் ரவுக்கையில் அது சிறியதுபோல தோன்றுகிறது. அவளுடைய சேலையின் நடுவே இடுப்பை கவனித்தார். அது கருப்பு தேக்கில் வார்னிஸ் பண்ணியது போல ஒரு மினுமினுப்போடு இருந்தது. மெதுவாக அவளுடைய நிர்வாணத்தை நினைத்துப் பார்த்தார். அப்பா... இவள் கோவில் சிலை போல இருப்பாள் என்று நினைத்துக் கொண்டார்.

"எதுக்குமா இங்க நின்னுக்கிட்டு இருக்க.. என்ன வேணும் உனக்கு." என்று செல்வநாயகம் அவளை அணுகி கேட்டார். விவசாயி இறந்தால் ஐம்பதாயிரம் கொடுப்போம் என்று முதலமைச்சர் என்றோ அறிவித்திருந்த ஒரு செய்தியையும், அதை ஊரில் ஒருவர் இவளிடம் சொல்லி அந்த நிதியை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வருவாய் துறை அலுவலகத்திற்கு செல்லும்படி தெரிவித்ததையும் கூறி அழுதாள். "அட.. அழுவாதேம்மா.. அரசாங்க அலுவகத்துக்குள்ள இப்பவெல்லாம் நேரடியாக நுழைய முடியாது. வேலைக்கு ஆகாது. என்கூட வா.. உனக்கு அந்தப் பணத்தை வாங்கி தாரேன்." என்றார். ராக்கிக்கு பெரிய ஆதரவாக தோன்றியது. திக்கில்லாமல் மாட்டிக் கொண்ட காட்டில் நாயொன்று வந்து வழிகாட்டி சாலையில் விடுவதைப் போல ஒரு ஆசுவாசம் தோன்றியது.

ஆனால் நமக்குதானே தெரியும்... கையாளாகாத விவசாயின் ஒருவனின் மனைவியாக இருந்த ராக்கி இனி எப்படி ஆகப்போகிறாள் என..

செல்வநாயகம் முன்னே செல்ல அவருக்கு பின்பாக ராக்கி சென்றாள். செல்வநாயகம் சாலையைக் கடந்து எதிரே இருந்த டீ கடையில் இருந்து இரண்டொருவரை கண்டு வணக்கம் தெரிவித்தார். அவர்களும் வணக்கம் தெரிவித்தனர். அவர்களிடையே ராக்கியை காட்டி அவளைப் பற்றி பேசினார். ராக்கிக்கு அவர் பேசுவதன் மூலம் மேலும் நம்பிக்கை அதிகமானது. ஏதோ சில விசயங்கள் அவளுக்கு புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தன. செல்வநாயகம் பேசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் ராக்கியை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு "ம்ம்..." என பெருமூச்சு விட்டான்.

"செல்வா சார்.. டீ சாப்படறீங்களா" என்று ஒருத்தன் கேட்க.

"வேணாம்பா.. மதியமே ஆகப் போகுது. இப்ப டீ சாப்பிட்டா.. சாப்பாடு சாப்பிட முடியாது" என்றார் செல்வநாயகம். செல்வநாயகத்திற்கு இருக்கக்கூடிய செல்வாக்கு அது.

"அதுசரிதான். வேளா வேளைக்கு சாப்பிட நாங்க என்ன உங்களை மாதிரியா கவர்மெண்ட் சாப்பாடு சாப்படறோம். ஏதோவது கிராக்கி வந்தாதான்" என்றான் வேறொருவன். செல்வநாயகம் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு ஒரு ஜெராக்ஸ் கடையில் சில ஜெராக்ஸ் செய்யப்பட்ட தாள்களை கேட்டு வாங்கினார்.

"எவ்வளவுப்பா ஆச்சு"

"பத்திரம் மூணு, ஸ்டாம்ப் தாள் ஆறு. மொத்தம் இருபத்தி ஏழு சார்"

செல்வநாயகம் பின்னால் திரும்பி ராக்கியிடம் "இருபத்தி ஏழு ரூபா இவர்கிட்ட தாமா" என்றார். ராக்கி தன்னுடைய கையை சேலைக்குள் விட்டாள். தொப்புளுக்கு இடப்பக்கமாக பாவடையில் சொறுகியிருந்த சுருக்குப் பையை வயிற்று கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்து எடுத்தாள். அதனைத் திறந்த கந்தலாகி இருந்த ஒரு இருபது ரூபையை நீட்டிவிட்டு. சுருக்குப் பைக்குள் சில்லறைகளை தேடிக் கொண்டிருந்தாள். அவளுடைய சுருக்குப் பையில் இரண்டொரு காசுகள் மட்டுமே மீதமிருந்தன என்பதை செல்வநாதன் புரிந்து கொண்டார்.

"ஏம்மா.. உன் புருசனோட ஆதார்கார்டு, உன்னோட ஆதார்கார்டு, அப்புறம் ரேசன்கார்டு.. இதோட ஜெராக்ஸ்செல்லாம் இருக்கா" என்று கேட்டார். ராக்கி சுருக்குப் பைக்குள் காசுகளை தேடுவதை விட்டுவிட்டு அவரைப் பார்த்து விழித்தாள்.

"அட என்னம்மா.. ஒரிஜினலாவது இருக்கா" என்று கேட்டார்.

"அதெல்லாம் வீட்டுல இருக்குங்க.." என்று இழுத்தாள்.

"சரியாப் போச்சு. " என்று அவளிடம் சொல்லிவிட்டு அவருடைய பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து கடைக்கார பையனிடம் கொடுத்து ஜெராக்சையும், ஸ்டேம்பையும் சில்லறையும் வாங்கிக் கொண்டு..

"இதோ பாரும்மா ராக்கி.. எப்ப அரசாங்க வேலையா வந்தாலும், நம்ம கிட்ட இருக்கிற அத்தனை கார்டையும் கொண்டுவந்திடனும், சரி இன்னைக்கு வேலைக்கு ஆகாது. சாப்பிட்டுட்டு நீ ஊர்க்கு கிளம்ப வேண்டியதுதான்."

"..."

"ஆமா.. உங்க ஊருக்கு இப்ப பேருந்து இருக்காதே.. கையில காசும் இல்லை. எப்படி சாப்பிடுவ.." ராக்கியை முழுவதுமாக அவருக்காகவே ஆண்டவன் அனுப்பியது போல இருந்தது. ராக்கி என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தாள். இப்போது பேருந்துக்கு கூட காசில்லாமல் சாமிக்கு போட்டிருந்த ஒரு மஞ்சள் முடிச்சினை அவிழ்த்துதான் அந்தக் காசை எடுத்து வந்திருந்தாள்.

"ஆபிசுல அத்தனை சத்தம் போட்ட பொண்ணா இதுனு தோனுது. பணமில்லைனுதான் ஒரு பைய உன்னை கண்டுக்காம விட்டிருக்கான். சரி என்கூட வா." என்று சொல்லிவிட்டு இன்னும் சில அடி தூரம் நடந்து ஒரு உணவக கடைக்கு முன் நின்று சிறுவனைப் பார்த்தார். அவன் ஓடி வந்தான்.

"இரண்டு சாப்பாடு தம்பி" என அவன் கையில் சில பணத்தாளை வைத்தார். அவன் உள்ளே ஓடினான்.

செல்வநாயகம் அங்கு நிற்காமல் மீண்டும் நடந்து ஒரு சந்தின் பக்கம் திரும்பினார். அவள் பின்னே நடந்து போன ராக்கிக்கு அந்த சந்துப் பகுதி ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருப்பது வியப்பாக இருந்தது.

செல்வநாயகம் அந்த சந்திலிருந்த ஒரு சிறிய வீட்டின் முன்வாசல் கதவை திறந்து..

"உள்ள வாமா?" என்றபடி உள்ளுக்குள் சென்றார். அவளும் தயங்கியபடி உள்ளுக்குள் நுழைந்தாள்.

"இப்படி உட்காந்துக்கோ" என நாற்காலியை கை காட்டினார்.

"என்னாம்மா பார்க்கிற."

"வூட்டுல யாரையும் காணாங்களே.."

"நான் ஒன்டிக்கட்டைம்மா.. "

"ஏன் சார்.. நீங்க கண்ணாலம் பண்ணிக்கலையா?"

"ஊட்டுக்கார அம்மா தவறி போய் மூணு வருஷம் ஆகுதுமா. பையன் படிச்சு வேலைக்கு லண்டன் போனான். அங்கேயே ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டான். முன்னாடிலாம் வருஷத்துக்கு ஒரு தடவை வந்துகிட்டு இருந்தா அவங்க அம்மா இறந்ததில்லை இருந்து இப்ப வர்றதுக்கு அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால நான் ஒருத்தன் தான் மா"

"நீங்க மட்டும் ஏன் சார் நீங்க தனியா கஷ்டப்படுறீங்க.."

"இதில் என்னமா அரசாங்க சம்பளம் வாங்கினேன் இப்ப ரிட்டயர்மென்ட் லைஃப் பையனை பத்தியோ பொண்ண பத்தியோ கவலைப்படுவதற்கு எனக்கு ஒன்னும் இல்ல. சரி வாழ வரைக்கும் கொஞ்ச நாளைக்கு ஆவது நாம மத்த ஆளுங்களுக்கு எல்லாம் உதவி விட்டு போலாம் அப்படின்னு புண்ணியம் தேடிட்டு இருக்கேன். உன்னை மாதிரி வழி தெரியாம இந்த அரசாங்க அலுவலகத்துக்கு வர ஆளுங்களுக்கு எல்லாம் ஏதோ என்னால முடிஞ்ச உதவிகளை செஞ்சு இருக்கேன்."

"இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் சார். "

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா இங்க இருக்கிற அரசாங்கமோ அதோட சிஸ்டமும் சரியில்லை ஒரு பக்கம் பணம் நிறைய வச்சுக்கிட்டு சட்ட திட்டங்கள் பத்தியும் இதுல உள்ள நடைமுறை சிக்கல்களை பற்றியும் நல்லா தெரிஞ்சுகிட்டேன் உங்களுக்கு மட்டுமே இதோட ரகசியம் புரியும். இங்க படிப்பறிவு இல்லாம பண வசதி இல்லாம அரசாங்கத்தோட உதவியை நினைச்சுக்கிட்டு படி ஏற மக்களுக்கு ஒண்ணுமே நடக்கிறது இல்லை. "

"வாஸ்தவம் சார்.. நானும் நடையா நடக்கிறேன் எனக்கு உதவி செய்வதற்கு இங்கே யாரும் இல்லை சார்."

"நீ அதெல்லாம் நினைச்சு கவலைப்படாதம்மா இனிமேல் நான் இருக்கேன். " என்று செல்வநாயகம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வாசலில் கடைப்பையன் வந்து நின்றான் இரண்டு சாப்பாட்டோடு.. அதனை செல்வநாயகம் வாங்கிக் கொண்டார்.

அந்த அருகில் இருந்த டைனிங் டேபிளில் இருவரும் ஒக்காந்து சாப்பிட தொடங்கினர். நெடு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வெளியே வந்து சாப்பிடுகிறாள் ராக்கி. அவளுக்குள் ஒரு வித குற்ற உணர்ச்சி இருந்தது. ஓசி சோறு சாப்பிடுகிறோமே என்று அவளுக்கு தோன்றியது. ஆனால் பணிவாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதர் அவள் எதிரே பேசிக்கொண்டே சாப்பிடும் பொழுது அதை எல்லாவற்றையும் அவள் மறந்தாள்.

இந்த உலகில் உறவுகளும் நட்புகளும் கைவிட்ட எண்ணற்ற மனிதர்கள் உலாவி கொண்டிருக்கிறார்கள். சாலை ஓரங்களில் அழுக்கு சட்டைகளுடன் தலைவிரி கோலத்துடன் கண்களில் சோகத்துடன் உடலில் பலவீனத்துடன் இருக்கக்கூடிய எண்ணற்ற மனிதர்கள் இப்படி சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட ராக்கி போன்ற மனிதர்கள் இடம் இருந்து தான் வந்திருக்கிறார்கள். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ராக்கிக்கு செல்வநாயகம் என்ற ஒரு மரக்கட்டை தற்பொழுது கிடைத்திருக்கிறது அதை வைத்துக் கொண்டு ராக்கி கடலில் மூழ்காமல் தப்பித்துக் கொள்வாள்.

எல்லோருக்கும் செல்வநாயகம் போல ஒரு ஆதரவான மனிதர்கள் கிடைப்பதில்லை. கண்பெண்டு அன்புள்ள என சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் தன்னுடைய வீட்டினை மட்டுமே கவனித்துக் கொண்டு ஏழெட்டு தலைமுறைக்கும் நீ சொத்தை சேர்த்து அதன் பின் வரக்கூடிய அத்தனை மனிதர்களையும் சோம்பேறிகள் ஆக்கி சமூகத்திற்கு நல்லதே செய்யாத பலர் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதும் தொழிலதிபர்கள் ஆகவும் அரசியல்வாதிகளாகவும் மென்மேலும் பல்வேறு வசதிகளில் பெற்று இந்த உலகத்திலேயே ஆளக்கூடிய மனிதர்களாகவும் இருக்கின்றார்கள் எதார்த்தம் இப்படி இருக்க அறம் அறம் என்று பேசிக் கொண்டிருக்கும் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

"இதுதாம்மா என் வீடு. நாளைக்கு காலையில எட்டு மணிக்கே இங்க வந்திடு.. " என்று சொல்லிவிட்டு சட்டைப் பையிலிருந்த ஒரு ஐம்பது ரூபாய் தாளை அவளிடம் நீட்டி.. "பேருந்துக்கும் கைசெலவுக்கும் வைச்சுக்கோ." என்று தந்தார்.

ராக்கிக்கு செல்வநாயக்த்தை பார்க்கும் போது அவள் கும்பிடும் குன்னிமரத்தானே இறங்கி வந்தது போல இருந்தது. "சார்.. " என்று தயங்கினாள்.

"வாங்கிக்கோமா. தயங்காம வாங்கிக்கோ.. " என்றார். ராக்கி அவரிடம் பணத்தாளை வாங்கிக் கொண்டு கையெடுத்து கும்பிட்டாள். வாசலில் இருந்து விடைபெற.. அவளுடைய பின்னழகை பார்த்துக் கொண்டே நின்றிருந்தார் செல்வநாயகம்.

அடுத்த நாள் செல்வநாயகம் சொன்னது போல எட்டு மணிக்கே ராக்கி வந்து விட்டாள். செல்வநாயகத்தின் வீட்டிற்கு வந்தவள்.. கதை கூட தட்டாமல் முன் வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து விட்டாள். கோலம் போடுவதற்கு தேடினாள். ஆனால் அவளுக்கு கிடைக்கவில்லை. எப்போதோ.. செல்வநாயகம் எழுதி தூக்கி எறிந்த ஒரு அரை சாக்பீஸ் கடந்தது அதை எடுத்து ஒரு சிக்கல் கோலம் போட்டாள்.

செல்வநாயகம் கதவை திறந்து கொண்டு வந்த பொழுது.. சேலையை தொடைவரை தூக்கிக்கொண்டு ராக்கி குளம் போட்டிருப்பது பார்த்தால் அந்த அழகான வனப்பான கால்கள் அவருக்கு தன்னுடைய மனைவியாகவே ராக்கி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஏக்கத்தை உண்டாக்கியது.

"அடடா.. என்னமா நீ போய் வாசல் தெளிச்சுக்கிட்டு இருக்கிற.."

"நம்ம வீட்ட நாம தானே சுத்தமா வச்சுக்கணும்." என்றாள்.

செல்வநாயகம் அவளுக்கு காலை மசால் தோசை வாங்கி தந்தார். இரண்டு பேரும் காபி குடித்துவிட்டு சீக்கரமே ஆபிசுக்கு சென்றார்கள். அங்கு நேற்று ராக்கி தள்ளிவிட்ட அந்த உத்தம மனிதர் நின்று கொண்டிருந்தார்.

ராக்கி பார்த்ததும் அவருக்கு பற்றி கொண்டு வந்தது. "இந்த பொம்பளை எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குதே.. நேத்து கழுத்தை புடிச்சு விரட்டி விட்டா கூட இந்த அம்மா போகலையே" என்று முனகியபடி நடந்தவர். செல்வநாயகத்தை பார்த்ததும் அப்படியே பம்பினார்.

"வணக்கம் தம்பி.."

"வணக்கம் சார். "

"இது நமக்கு வேண்டப்பட்ட பொண்ணு.. உங்களுக்கு தான் விசயம் தெரியுமே.. "

"தெரியும் சார். நேத்து கூட.. வந்தாங்க.. " என அவளைப் பார்த்து மென்று முழுங்கினார்.

"நேத்து கதையை விடுங்க தம்பி. நான் சொன்னேன் சொல்லி கொஞ்சம் வேலையை சீக்கிரம் முடிச்சு கொடுங்க. "

"சரிங்க சார். முடிச்சிடலாம்."

"எவ்வளவு இப்ப.."

"முன்பணமா ஐந்து எதிர் பார்ப்பார் சார்."

"சரி.. வழக்கம்தானே.." என மஞ்சள் பையிலிருந்து ஒரு பேப்பரை அவரிடம் தந்தார் செல்வநாயகம்.

"இதுதான் சார் உங்க கிட்ட பிடிச்சது. பட்டுனு பேரம் பேசாம வேலையை முடிச்சடறீங்க.."

"சரி தம்பி.. நாங்க அந்த பூவரசு மரத்துக்கிட்ட உட்கார்ந்து இருக்கோம். சார் வந்ததும் பேசிட்டு சத்தம் போடு.. ஒடியாந்திடறோம்"

"சரி சார்.."

பூவரசு மரத்தடியில் ராக்கி உட்காந்து இருந்தாள். லைட்டான சிகப்பு நிற சேலையில் தேவதையாக தெரிந்தாள்.

செல்வநாயகம் தலையீடு என்று அலுவலகத்திற்கு தெரிந்ததும். பணம் வேலை செய்தது. ராக்காயி கண்டதுமே கோபம் கொண்டு வெளியே செல் என்று துரத்தியவர்கள் எல்லாம் இப்பொழுது புன்னகையுடன் அவளை எதிர் கொண்டார்கள். ராக்காயிக்கு அது வினோதமாக இருந்தது. பணத்தை பார்த்தால் பிணமும் வாயை பிளக்கும் என்பார்களே.. அதெல்லாம் கூறியது இப்படி அரசாங்கத்தினுடைய படிகளை ஏறி இங்கிருக்கும் பிணங்களை எல்லாம் பார்த்தவர்களாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

"எம்மா.. ராக்கம்மா.. ஐயா கூப்பிடராறு"

ராக்கம்மாவும், செல்வநாயகமும் ஓடினார்கள்.

"வணக்கம் சார்.." அங்கிருக்கும் அதிகாரியை பார்த்து வணக்கம் வைத்தார் செல்வநாயகம்.

"வணக்கம் செல்வா சார். உங்கள மாதிரி நல்ல மனுஷங்க இருக்கறதுனால தான் இந்த ஊர் உலகத்துல மழையே பெய்து பாருங்க.. வாங்க உட்காருங்க.." அதிகாரி அத்தனையும் சொன்னாலும் புன்னகை செய்தார் செல்வநாயகம்.

அதிகாரியின் முன்னால் இருக்கக்கூடிய நாற்காலியில் செல்வநாயகம் ஒக்காந்தார். அவர் பின்னே கையிலிருக்கும் மஞ்சள் பையை கட்டிக் கொண்டு ராக்காயி நின்று இருந்தாள். அவளை ஒரு நிமிடம் அதிகாரி பார்த்துவிட்டு கண்ணை கீழே போட்டுக் கொண்டார்.

சட சடவென தாள்களை திருப்பி ஒரு ஏழு எட்டு இடங்களில் பெருக்கல் குறியை இட்டார்.

"செல்வம் சார் இதுல எல்லாம் ராக்காயி கையெழுத்து போடணும். மத்ததெல்லாம் நம்ம பியூன் பார்த்து சொல்லு மாப்ள நல்லா கேட்டுகிட்டு அது மாதிரியே செஞ்சு குடுங்க. "

"ரொம்ப நன்றி சார் கொஞ்சம் பார்த்து செஞ்சு கொடுங்க. ஏழை பிள்ளை."

"அதெல்லாம் இங்க வந்துட்டீங்களா சார் எல்லாம் பக்காவா செஞ்சிடலாம். நம்மோடு என்ன நடைமுறை தெரியாம உள்ள வந்துறாங்க. நம்ம ஓப்பனா சொல்ற இடத்திலேயே இருக்கும் இப்பதான் காலம் கெட்டுப்போச்சுங்களே.. கொஞ்சம் அசந்தாலும் சீட்டுக்கு ஆப்பு வச்சிடறாங்க.. "

"புரியுதுங்க சார்.. புரியுது"

"செல்வா கூட்டிட்டு போங்க.. " என பியூனைப் பார்த்துச் சொன்னார். செல்வநாயகமும், ராக்காயியும் பியூன் பின்னே சென்றார்கள்.

"செல்வா சார் இதுல எல்லாத்துலயும் கையெழுத்து வாங்கணும் அவ்வளவுதான். ராக்காயி கை நாட்ட கையெழுத்தா..?" என பியூன்னு கேட்டார்.

"ராக்காயி உனக்கு கையெழுத்து போட வருமா?"

"தெரியாதுங்க சார். படிக்கலை.."

"இவன் சார் கேட்டுட்டீங்களா.?. ஸ்டாம்ப் பேடு இருந்தா கொஞ்சம் குடுங்க. ரேகை உருட்டி விடலாம்.."

ஸ்டாம்ப் பேடை எடுக்க உள்ளே சென்றார்.

கையில் வைத்திருந்த தாள்களைப் புரட்டி ஒன்று இரண்டாக செல்வநாயகம் அதை பூர்த்தி செய்து கொண்டே வந்தார்.

"ராக்கி உன்னோட பேரு, புருஷன் பேரு, ஊரு விலாசம்.. எல்லாத்தையுமே போட்டுட்டேன். ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தராங்க இல்ல அதனால.. உன்னோட சில தகவல்கள் எல்லாம் கேக்குறாங்க. நான் கேட்க கேட்க அப்படியே சொல்லிக்கிட்டே வா. நான் இதுல எழுதி போடறேன்.."

பியூன் வந்து ஸ்டாம்ப்பேடை செல்வநாயகத்திடம் தந்து விட்டு சென்றான்.

"ராக்கி.. இந்த பேடுல கட்டை விரலை வைச்சு உருட்டி எடு"

"அட இப்படி உருட்டுனா.. கைவிரல் ரேகை சரியா விழாது. "

செல்வநாயகம் மரத்தடியில் உட்கார்ந்து இருந்த ராக்காயின் பின்னால் நின்று குணிந்து அவளுடைய கையைப் பிடித்தார். பின்னாலிருந்து பார்க்கும் பொழுது அவருடைய சேலையை சற்று விலகி அவருடைய மார்புகளுடைய பிளவுகள் அவருக்கு நன்றாக தெரிந்தன. ஒரு விதவைப் பெண்ணின் இயக்கங்கள் நிறைந்த மார்பு பகுதி கோடுகள் அவருக்கு ஏதோ செய்தது. ஆனால் இதற்கெல்லாம் நேரமில்லை என செல்வநாயகம் அவளுடைய கைவிரலை நன்றாக பேரில் வைத்து உருட்டி மையை சரியாக கையாண்டார். அவள் கட்டைவிரலை பிடித்து எங்கெங்கெல்லாம் பெருக்கல் குறி போடப்பட்டிருக்கின்றதோ அங்கே எல்லாம் ரேகை நன்றாக தெரியும் அளவிற்கு உருட்டி எடுத்தார்.

அந்த வேலை முடிந்ததும் பாரங்களில் முழுமை செய்ய ஒவ்வொரு வரியாகப் படித்தார்

"எவ்வளவு உயரம் இருப்ப?"

"தெரியாதுங்களே.."

"தெரியாதா?. எல்லாம் ரொம்ப சரியா போடணும்மா.. கொஞ்சம் தப்பா போச்சுன்னாலும் நீ தான் ராக்காயின்னு அதிகாரிங்க வந்து நம்ப மாட்டாங்க."

"அச்சச்சோ.. இப்ப என்னங்க பண்றது?"

"சரி டேப்பு வைச்சு அளந்துக்கலாம். இப்ப இதை விட்டுட்டு அடுத்ததை பார்க்கிறேன். சரி உன் எடையை சொல்லு?"

"தெரியலைங்களே.."

"சரியா போச்சு போ.. அட உன்ன பத்தி தானம்மா நான் கேட்கிறேன் நீ எவ்வளவு உயரம் எவ்வளவு இடம் இருக்கிற உனக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கு? உன் தலை முடி கருப்பாச்சே அப்பா உன் கண் கலர் என்ன?. உடம்புல ஏதாவது ஒன்னு இருக்குதா நல்லா இருக்கிறியா நீ பார்க்க எப்படி இருப்ப குண்டா இருப்பியா ஒல்லியா இருப்பியா? இம்புட்டையும் இதுல கேட்டு இருக்காங்க.. அதெல்லாம் நாம சரியா சொன்னா தான். இந்த மனுவை மேல இடத்துக்கு போயி உனக்கு அம்பது ஆயிரம் சொல்லி அரசாங்கம் அனுப்பி வச்சா.. அதைக் கொடுக்க வர அதிகாரி இதெல்லாம் சரியா இருந்தா தான் ஒத்துக்குவாப்புள்ள.."

"இந்த விவரம் எல்லாம் தெரியாதுங்க சார். நீங்களா பத்தி ஏதாவது செய்யுங்க.. நான் உங்களை நம்பித்தான் இருக்கேன்.."

"சரி.. எங்கனவே கொஞ்சம் இரு இந்த பியூன் கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்."

செல்வநாயகம் அவளை மறத்தடியிலே விட்டுவிட்டு பியூனி பார்க்கச் சென்றார்." தம்பி இந்த பொண்ணுக்கு சரியான விவரம் தொல்லை தெரியல அதனால நான் என்ன பண்ணுறேன் பாம் வீட்டுக்கு எடுத்துட்டு போயி பில்லப் பண்ணிட்டு எடுத்துக்கிட்டு வாரேன்"

"செல்வா சார் இதெல்லாம் முறைப்படி அவர் முன்னாடி வச்சு கையெழுத்து வாங்கணும் அவரு என்கிட்ட சொல்லி என் முன்னாடி கையில் தாங்க சொன்னாரு நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறீங்க அவர் ஒத்துக்க மாட்டார்களே.. "

"அட என்ன தம்பி நீங்க எனக்கு தெரியாதா உங்களுக்கு இந்த பிள்ளைக்கு சரியா எடை தெரியல உயரம் தெரியல எப்படி நான் குத்துமதிப்பாக எழுதி போடறது.. ஊட்டுல மிஷின் இருக்குது போட்டு பார்த்து எழுதி எடுத்துட்டு வரேன்.. இந்தாங்க அம்பது ரூபா"

யூனியன் கையில் ஐம்பது ரூபாயை திணித்தார் செல்வநாயகம்.

"எல்லாத்துக்கும் டீக்கும் போண்டா பஜ்ஜி வாங்கி கொடுங்க. செல்வநாயகம் சார் வாங்கி தர சொன்னாருன்னு சொல்லுங்க. நம்மள பத்தி தான் எல்லாத்துக்கும் தெரியும் இல்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்க நான் வெரைச்சா பண்ணிட்டு வந்துடறேன். "

"அம்மாடி ராக்கி வாமா வீட்டுக்கு போலாம்.." இன்று ராசியை கைநீட்டி அழைத்து முன்னே சென்றார்.

"சார் பியூன் என்ன சொன்னாப்ல.."

"வெரசா டீடெயிலில் பில் பண்ணிட்டு வர சொல்றாப்ல.. நான் ஒரு டீய குடிச்சிட்டு வீட்டுக்கு போவோம். அங்க எடை மெஷின் டேப் எல்லாம் இருக்குது பாரத்துல கேக்குறது எல்லாத்துக்கும் தகவல் எல்லாம் எடுத்துக்கிட்டு எழுதிக்கிட்டே வந்தரலாம் கையோட"

"சரிங்க சார்.. டீக்கு காசு எடுத்துட்டு வந்து இருக்கேன் சார்.."

"இருக்கட்டும் இருக்கட்டும்.. அதையெல்லாம் வெச்சிருந்தா ஒரு ரெண்டு நாள் பொழப்பை ஓட்டுவீல்லை. கையில இருக்க பணத்தை எடுத்து எதுவும் செலவு பண்ணாத மாச பென்ஷன் வாங்கறேன் நானு. நானே செலவு பண்றேன்.."

"என்னால உங்களுக்கு சுமைதான் சார் அதிகம்.."

"சரி விரசா வா.."

அவர்கள் டீயை குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர் வெயில் கடுமையாக இருந்தது செல்வநாயகத்தின் வீட்டிற்குள் சென்றதும் அவர் ஒரு எடை மிஷினை தூக்கி வைத்தார்.

"ராக்கி இதுல ஏறி நில்லு.." என்றார். ராக்கியும் அதில் ஏறி நின்றாள்.

"தலைய நேரா வச்சு பாரு ராக்கி.."

"என்ன இம்புட்டு எடை காமிக்குது. உன்ன பாக்கறப்ப 66 கிலோ இருக்கிற மாதிரியா தெரியுது.."

"ஐயோ அவ்வளவு எடைங்களா காட்டுது..?"

"அட ஆமா ராக்கி.. நீ வேணா இதுல பாரு. முள்ளு 60வதை தாண்டுக்கு பாரு. "

ராக்காயி என் தலையை கீழே குனியும் பொழுது அந்த எடை மெஷின் மேலும் இரண்டு புள்ளிகளை கூட்டி நிறுத்தியது.

ராக்காயிக்கு தூக்கி வாரி போட்டது. எப்போது திரையரங்கிற்கு செல்லும் பொழுது இரண்டு ரூபாய் போட்டு எடை பார்த்தது அப்பொழுதெல்லாம் ராக்கி 40 கிலோ தான் இருந்திருந்தால் 20 கிலோ நம்ம ஏறி காண்பிக்கிதோ.. ராக்காயிக்கு பக்கென இருந்தது.

"ராக்காயி கையில வைச்சிருக்க மஞ்சபை கீழே போடு. இப்ப எடை என்ன காட்டுதுனு பார்ப்போம்" ராக்காயி கையில் வைத்திருந்த மஞ்சள் பையை கீழே வைத்ததும் இரண்டு புள்ளிகள் குறைந்தது.

12